close
Choose your channels

அட்வைஸ் பண்ண தகுதி வேண்டாமா? மகத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Friday, July 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை. பிக்பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டர்களும் பலவிதமாக யோசித்து டாஸ்க்குகளையும் பிரச்சனைகளையும் உருவாக்கினாலும் அவை காமெடியாகவோ அல்லது மொக்கையாகவோ மாறிவிடுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமானவர் என்று கூறப்படுபவர் மகத். கிட்டத்தட்ட வீட்டில் உள்ள எல்லோரிடமும் சண்டை போட்டுவிட்டார். இந்த வாரம் இவர் தலைவர் என்பதால் எவிக்சன் பட்டியலில் இருந்து தப்பிவிட்டார். இவர் இந்த பட்டியலில் இடம்பெறும் வாரம் நிச்சயம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் தனது சக போட்டியாளர்களுக்கு மகத் அறிவுரை கூறுகிறார். வீட்டில் இருப்பவர்களுக்கு மனிதாபிமானம் வேண்டும் என்றும், டாஸ்க்கை தனிப்பட்ட விரோதமாக கொள்ளாமல் போட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் மகத் இந்த விஷயத்தை அவர் கடைபிடித்தாலே பல பிரச்சனைகள் தவிர்க்கப்படும் என்றும் சாத்தான் வேதம் ஓதுவதாகவும் மகத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.