close
Choose your channels

முத்தம் கொடுப்பதில் சிறந்தவர் யார்?- மகத் மனைவி பேட்டி

Friday, February 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் புகழ் மதத்துக்கும் நடிகை பிராய்ச்சிக்கும் கடந்த 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் மகத்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சிம்பு கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தங்கள் திருமண வாழ்க்கை குறித்து ஊடகம் ஒன்றுக்கு மகத் மற்றும் பிராய்ச்சி பேட்டி அளித்துள்ளனர். இந்தப் பேட்டியில் முத்தம் கொடுப்பதில் மிகவும் சிறந்தவர் என்று மகத் தான் பிராக்ஸி ஒப்புக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் பிராய்ச்சிக்கு அடிக்கடி கோபம் வரும் என்றும் அவரது கோபம் 5 மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் அந்த 5 மணி நேரமும் தான் கெஞ்சி மன்னிப்பு கேட்டுக் கொள்வேன் என்றும் மகத் கூறியுள்ளார்

மேலும் பிராய்ச்சி ஒரு செல்ல நாயை திருமணத்துக்கு முன்பு இருந்தே வளர்த்து வருவதாகவும், அந்த நாய் திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய படுக்கையில் தான் தூங்கும் என்றும், திருமணத்திற்கு பின் அந்த நாய்க்கு தனியாக படுக்கை வாங்கி கொடுத்தும், சிலசயம் அந்த நாய் எங்கள் இருவருக்கும் இடையே வந்து படுத்து கொள்ளும் என்றும்,  நள்ளிரவு நேரத்தில் திடீரென சூடான காற்று முகத்தில் அடிக்கும் என்றும் அது யார் என பார்த்தால் அது மகத் இல்லை தான் வளர்க்கும் செல்ல நாய்தான் என்றும் பிராய்ச்சி தனது பேட்டியில் கூறியுள்ளார். மகத், பிராய்ச்சியின் இந்த ஜாலியான பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.