மீண்டும் இணையும் 'தெறி' ஜாம்பவான்கள்

  • IndiaGlitz, [Friday,April 22 2016]

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், ஜி.வி.பிரகாஷ், அட்லி, மகேந்திரன், கலைப்புலி எஸ்.தாணு ஆகிய ஜாம்பவான்கள் இணைந்திருந்தனர். இந்நிலையில் இவர்களில் அட்லியும் மகேந்திரனும் மீண்டும் இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மகேந்திரன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கவுள்ள படத்தில் அட்லி வசனம் எழுதவுள்ளதாக பேட்டி ஒன்றில் இயக்குனர் மகேந்திரன் கூறியுள்ளார். இதன்மூலம் அட்லி-மகேந்திரன் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.

அட்லியின் வசனங்கள் அர்த்தம் உள்ளவை என்பதை நேரில் உணர்ந்ததாகவும், குறைந்த வார்த்தைகளில் நிறைந்த அர்த்தம் உள்ள வசனம் எழுதும் திறமை அவரிடம் உள்ளதாகவும் மகேந்திரன் புகழ்ந்துள்ளார். நான் அவரிடம் எனது படத்திற்கு வசனம் எழுதுமாறு கூறியவுடன் ஆச்சரியம் அடைந்து ஒப்புக்கொண்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

திலீப் சுப்பராயனுடன் இணையும் 'சென்னை 600028' சகோதரர்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன், 'சங்குச்சக்கரம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ...

ரூ.100 கோடி கிளப்பில் சாதனையுடன் இணைந்தது விஜய்யின் 'தெறி'

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆன 'தெறி' திரைப்படத்தின் தமிழக வசூல் ஒரே வாரத்தில் ரூ.47 கோடி ஆனது என்பதை நேற்று பார்த்தோம்...

சிம்புவுக்கு கவுதம் மேனன் கொடுத்த ரோல் என்ன?

சமீபத்தில் சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு மற்றும் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' படத்தின் படப்பிடிப்பு ஒரே ஸ்டுடியோவில் ....

ஸ்ருதிஹாசன் என்னை விட மேல். கமல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே பணிவானவர்தான். ஆனால் அவர் வீட்டில் இருந்து வந்துள்ள விக்ரம்பிரபு அவரைவிட பணிவானவர் ....

சிம்புவை வெளியேற விடமாட்டேன் - நாசர்

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவது குறித்து நேற்று வந்த செய்தி குறித்து நடிகர் சங்கத்தலைவர் நாசர் கூறியபோது, 'சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவதாக ஊடகங்களில் ....