பெண்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்… அதுவும் குறுகிய காலத்தில்… விவரங்கள் இதோ?

  • IndiaGlitz, [Friday,June 09 2023]

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிமியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சேமிப்பு பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதை பயன்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தபால் நிலையத்திற்கு முன்னால் வரிசையில் நின்றதைத் தொடர்ந்து ஊடகங்களில் பரவலாகியது.

பொதுவாக சேமிப்பு திட்டம் என்றாலே நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் எனப்படும் MSSC திட்டத்தில் இணைந்து வெறும் 2 வருடத்தில் நிறைய வட்டித் தொகையைப் பெற்று சேமிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

உண்மையில் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் எனப்படும் MSSC திட்டத்தின் முதிர்வு காலம் வெறும் 2 வருடங்கள்தான்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தபால் நிலையங்களிலும் இந்த MSSC கணக்கை துவங்கி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தில் இணைவதற்காக ஆதார் மற்றும் பார்ன் கார்ட் இருந்தால் மட்டுமே போதுமானது.

தபால் நிலையத்திற்கு சென்று MSSC திட்டத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்கும் விண்ணப்பப் படிவத்தை வாங்கி நிரப்பிக் கொடுத்தால் இந்தத் திட்டத்தில் எளிதாக இணைய முடியும். ஆன்லைனில் கிடைக்கும் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பின்னர் நேரடியாக தபால் நிலையத்திற்கு சென்றும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

MSSC திட்டத்தில் ஒரு நபர் ரூ.1,000 - ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். எடுத்ததும் ரூ.2 லட்சத்தை கணக்கில் போட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

ஒருவர் ரூ.1,000 டெபாசிட் செய்து பின்னர் படிப்படியாக ரூ.2 லட்சத்திற்குள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தனது கணக்கில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

இப்படி டெபாசிட் செய்யும் தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இது மற்ற வங்கிகளில் பிக்சட் டெபாசிட் தொகைக்கு கொடுக்கும் வட்டியை விட அதிகம்.

இதைத்தவிர இந்தத் திட்டத்தில் இன்னும் ஒரு கூடுதல் சிறப்பு காணப்படுகிறது. அதாவது முதல் காலாண்டில் கொடுக்கப்படும் வட்டி பணத்திற்கும் சேர்த்து அடுத்த காலாண்டில் வட்டி கிடைக்கும். இதனால் கூடுதல் வட்டியை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட MSSC பத்திரக் கணக்கையும் தொடரலாம். இதனால் ஒரு நபர் 2 லட்சத்திற்கு மேலும் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் இந்த MSSC திட்டத்தில் போட்டு வைத்து வட்டியை பெற்றுக் கொள்ளலாம்.

1-18 வயதுடைய சிறுமிகள் சார்பாக அவரது பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். அடுத்து 18 வயதிற்கு மேற்பட்ட எந்த வயது பெண்களும் இந்தத் திட்டத்தில் இணைய முடியும்.

ஆனால் ஒரு நபர் ஒன்றிற்கு மேற்பட்ட MSSC கணக்கை துவங்க வேண்டுமானால் குறைந்தது 3 மாத இடைவெளிக்குப் பிறகே புதிய கணக்கை துவங்க இயலும்.

இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புழக்கத்திற்கு வந்த MSSC திட்டம் வரும் 2025 மார்ச் 31 வரை பயன்பாட்டில் இருக்கும்.

MSSC திட்டத்திற்கு 2 வருடம் முதிர்வு காலமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை நடுவில் பணம் எடுக்க முடியுமா? என்ற கேள்வி வரலாம்.

கணக்குத் துவங்கி ஒருவருடம் கழிந்த பிறகு செலுத்திய பணத்தில் இருந்து 40% பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளவும் இந்தத் திட்டத்தில் வழி உண்டு.

அதேபோல நோய் தொடர்பான மருத்துவ உதவிகளுக்காக இந்தத் திட்டத்தில் இருந்து பணத்தை திரும்ப எடுத்துப் பயன்பெறவும் முடியும்.

ஆனால் இடையில் பணத்தை திரும்பபெறும்போது வட்டி விகிதத்தில் 2% குறைத்துக்கொண்டு வெறும் 5.5% வட்டியை மட்டுமே கொடுப்பார்கள்.

ஒருவேளை MSSC கணக்கு முதிர்வு காலத்தை எட்டுவதற்கு முன்பே சம்பந்தபட்ட நபர் இறந்துவிட்டால் திட்டம் துவங்கிய 6 மாதத்திற்குள் வட்டி, பணம் முழுவதுமாக கைக்கு கிடைத்துவிடும்

18 வயதிற்கு குறைவான சிறுமியாக இருக்கும்போது பெற்றோர்கள் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சேமிப்பு திட்டத்தில் MSSC திட்டம் மிகக் குறுகிய கால முதிர்வு கொண்டது என்பதுதான் இதில் இருக்கும் மிகப் பெரிய அம்சமாகக் கருதப்படுகிறது. மேலும் வட்டிக்கு வட்டி என்ற அம்சமும் இதில் புதிது. மேலும் மற்ற வங்கிகளை விட பிக்சட் டெபாசிட் பணத்திற்கு 7.5 எனும் கூடுதல் வட்டி கொடுக்கப்படுகிறது.

எனவே அருகில் இருக்கும் தபால் நிலையங்களுக்குச் சென்று உடனே MSSC கணக்கை துவங்கி அதிக சேமிப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.

More News

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்… ஆவணங்களைத் திருடியதாக வழக்கு!

2016 தேர்தல் தோல்விக்குப் பிறகு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல அடுக்கடுக்கான குற்ற வழக்குகளில் சிக்கி வருகிறார்.

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போஜ்பூரி பாடகர்… போக்சோவில் கைது!

பீகார் மாநிலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் போஜ்பூரி இளம் பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்மா அப்பாவுக்கு திருமண வாழ்த்து கூறிய நயன் - விக்கி குழந்தைகள்: செம்ம புகைப்படம்..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலாவது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் உரிமை: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ்

யாஷிகா அம்மாவை அடுத்து ரிச்சர்ட் ரிஷியும் விளக்கம்.. அந்த போட்டோ இதற்காகத்தான்..!

சமீபத்தில் அஜித் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் இருவரும் காதலிக்கின்றார்களா?