எனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Saturday,March 28 2020]

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்தது இந்திய மக்கள் கோடிக்கணக்கான பேர் வரலாற்றிலேயே முதல்முறையாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

இந்த நிலையில் இதுவரை பிசியாக பணிபுரிந்து கொண்டிருந்த பலர் தற்போது ஓய்வு நேரம் கிடைத்துள்ளதை அடுத்து தங்களுக்குள் மறைத்து வைத்து இருந்த திறமையை வெளியே கொண்டுவர முயற்சிகள் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் நடிகைகளில் ஒருவரான நடிகை மஹிமா நம்பியார் அவர்கள் தற்போது வீட்டில் ஓவியம் வரைந்து கொண்டு இருக்கின்றார். நடிகை மஹிமா நம்பியார் தனது வீட்டின் சுவர்களில் ஓவியங்களை வரைவது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் கூறியபோது ’தனிமைப்படுத்திக் கொள்வதை பயன்படுத்தி இந்த நேரத்தில் எனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார். நீங்களும் ஓவியராக மாற உங்களுக்கு தேவை ஒரு சுவர், ஒரு பென்சில் மற்றும் பாராட்ட ஒரு அம்மா’ என்று கூறியுள்ளார். அவரது இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாட்டை, குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், மகாமுனி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை மஹிமா நம்பியார் தற்போது ஐங்கரன், அசுரகுரு, கிட்னா உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மேலும் ரூ.1000 கோடி நிதியுதவி செய்த டாடா

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்திய மக்களை காப்பாற்ற மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு உதவிடும் வகையில் டாடா நிறுவனம் மிகப்பெரிய தொகையாக ரூ.500 கோடி நிதியுதவி

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு: இம்முறை சிக்கிய இராஜபாளையம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போதைய நிலைமையில்

கொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வரும் நிலையில் மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது 

கொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்ள இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

இவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஏழை எளியவர்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.