பாஜகவில் இணைந்த கமல் கட்சியின் முக்கிய பிரமுகர்!

  • IndiaGlitz, [Friday,December 25 2020]

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த ஒருவர் இன்று பாஜகவில் இணைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார் என்பது தெரிந்ததே. இவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டது என்பதும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க உள்ளது என்பதும், இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த இரண்டு வாரங்களாக கமல்ஹாசன் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஆரம்பம் முதலே இருந்தவரும் கமல்ஹாசனின் வலதுகரம் போல் இருந்தவருமான அக்கட்சியின் நிறுவன பொதுச்செயலாளர் அருணாசலம் என்பவர் இன்று திடீரென பாஜகவில் இணைந்துள்ளார்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களின் முன்னிலையில் இன்று அவர் பாஜகவில் இணைந்து உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குஷ்பு உள்பட மாற்றுக் கட்சியில் இருந்து ஒருசிலர் பாஜகவில் இணைந்து உள்ள நிலையில் தற்போது கமல் கட்சியிலிருந்தும் ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தது குறித்து விளக்கமளித்த அருணாச்சலம், ‘கமலிடம் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்க கேட்டேன், அதற்கு மறுத்தார். விவசாயிகளுக்கு விரோதமான போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆதலால் பாஜகவில் தொண்டனாக என்னை இணைத்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

More News

ரிசார்ட்டில் போதை பார்ட்டி: போலீஸாரின் அதிரடி ரெய்டில் நடிகை கைது!

ரிசார்ட் ஒன்றில் போதை பார்ட்டி நடக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடியாக சோதனை செய்ததில் நடிகை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விஜய்யின் 'மாஸ்டர்' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ' சான்றிதழ் அளித்தார்கள் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

'மாஸ்டர்' படக்குழுவினர்களின் அதிரடி அறிவிப்பு: விஜய் ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்

பாட்டிலில் அடைத்து காற்று விற்பனை… 500 ml இன் விலை எவ்வளவு தெரியுமா???

இங்கிலாந்து நாட்டில் கொரோனா கால பாதுகாப்பை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று சுவாசிக்கும் காற்றை பாட்டிலில் வைத்து அடைத்து விற்பனை செய்து வருகிறது

எம்ஜிஆர் நினைவு தினத்தில் சூளுரை ஏற்ற இபிஎஸ், ஓபிஎஸ்!!!

அஇஅதிமுக கட்சியின் நிறுவனரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 33 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.