கோவிட் நோயாளிகளுக்காக 'மாஸ்டர்' மாளவிகா செய்த உதவி!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 21 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதில் அதில் சென்னையில் மட்டும் 6 ஆயிரம் பேர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாளவிகா மோகனன் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் மாளவிகா மோகனன் மூத்த மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜன் அவர்களுடன் உரையாடியுள்ளார். மருத்துவர் ஜெயந்தி நடராஜன் அவர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீன் ஆக இருக்கிறார் என்பதும், 30 வருடங்கள் மருத்துவத்துறையில் அனுபவமுள்ள இவர் கொரோனாவுக்கு எதிரான போரில் கடந்த ஒரு வருடமாக ஏராளமான கோவிட் நோயாளிகளை காப்பாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜெயந்தி நடராஜன் அவர்களுடன் மாளவிகா மோகனன் உரையாடிய இந்த வீடியோவில் கோவிட் குறித்து எழும் பொதுப்படையான சந்தேகங்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கல் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், வைட்டமின் உணவுகள் ஆகியவை குறித்து டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார் மு.க.ஸ்டாலின்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 259 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

அஜித் உதவி செய்தும் வறுமையில் வாடும் தமிழ் நடிகர்!

தமிழ் நடிகர் ஒருவருக்கு தல அஜித் தனது சொந்த செலவில் போட்டோஷூட் எடுத்து பிரபலப்படுத்தியும் அந்த நடிகர் தற்போது வறுமையில் வாடி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் ஷிவானிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு: டைட்டில் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பல நடிகர் நடிகைகள் தற்போது திரையுலகில் வாய்ப்பு பெற்று பிஸியாக இருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்தியாவில் பொது ஊரடங்கு குறித்து பேச்சுவார்த்தையா? மத்திய அரசு சொல்வது என்ன?

இந்தியா முழுக்கவே தற்போது மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை

தென்னிந்தியாவில் பரவிய N440K வைரஸ் 15 மடங்கு உயிரிழப்பு ஏற்படுத்தக் கூடியது… அதிர்ச்சி தகவல்!

சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கியது.