கைக்குழந்தையாக அம்மாவுடன் மாளவிகா மோகனன்.. அப்பா எடுத்த அரிய புகைப்படங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை மாளவிகா மோகனன், கை குழந்தையாகவும் சிறுமியாகவும் இருந்தபோது, தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை அவரது அப்பா எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தின் கேப்ஷனில், அவர் குறிப்பிட்டதாவது: "என் அப்பா முன்பு என்னையும், என்னுடைய அம்மாவையும் சேர்த்து அழகான புகைப்படங்களை எடுப்பார். அந்த புகைப்படங்கள் எல்லாம் திரைப்படங்களில் காணப்படும் பிரேம் போலவே உயிர்ப்புடன் இருக்கும். சிறு வயதில் இந்த புகைப்படங்கள் எவ்வளவு விலை மதிப்பற்றவை என்பதை நான் உணரவில்லை. ஏனென்றால், அப்போதெல்லாம் புகைப்படங்கள் அதிகமாக எடுக்கப்பட்டதால், அதை நான் கவனிக்கவில்லை.
ஒவ்வொரு குடும்பமும் இப்படியான புகைப்படங்கள் கொண்ட ஒரு குடும்பமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் இப்போது எல்லாம் டிஜிட்டலாக மாறிவிட்டது. புகைப்படங்கள் எடுப்பதும் எளிதாகி விட்டதால், என் அப்பாவும் புகைப்படங்களை எடுப்பதை நிறுத்திவிட்டார். அவருக்கு, டிஜிட்டலில் புகைப்படம் எடுப்பதில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பது போல தோன்றியிருக்கலாம். என் அப்பாவும் இப்படியான உணர்வுபூர்வமான புகைப்படங்களை மிஸ் செய்திருக்கலாம்!
இன்று என் அம்மாவின் பிறந்த நாள். அதனால் இந்த மலரும் நினைவுகள் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளேன்’ என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
இந்த புகைப்படத் தொகுப்பில், மாளவிகா மோகன் தனது அம்மா மடியில், கைக்குழந்தையாகவும் சிறுமியாகவும் இருப்பதை கண்ட ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்து, புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments