முகமூடி நடிகர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.. பெரிய புத்திசாலிகள் என நினைப்பு: மாளவிகா மோகனன்


Send us your feedback to audioarticles@vaarta.com


நல்லவர் போல், பெண்களுக்கு மரியாதை கொடுப்பது போல் நடிக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன் என்றும், அவர்கள் தங்கள் மனதில் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன், அதன் பின்னர் ’மாறன்’, ’மாஸ்டர்’, ’தங்கலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது கார்த்தி நடித்து வரும் ’சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி அளித்தபோது, ’சினிமாவில் சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்கள் போல் தங்களை காட்டிக் கொள்கிறார்கள், அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து நல்லவர் போல் நடித்து வருகிறார்கள்.
இந்த ஐந்து ஆண்டுகளில் நல்லவர் போல் நடித்து இருக்கும் முகமூடி அணிந்த பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் தங்கள் மனதில் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த நேரத்தில் பெண்களை மதித்து பேச வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து வைக்கிறார்களாக. ஆனால் கேமராக்குப் பின்னால் அவர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள் என்பதை நான் கண்ணால் பார்த்துகிறேன். ஏன் இந்த போலித்தனம்?
ஆண் என்றால் ஒரு மாதிரியும், பெண் என்றால் ஒரு மாதிரியும் பார்க்கும் போக்கு சினிமாவில் மிக ஆழமாக உள்ளது. இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது என தெரியவில்லை’ என ஆதங்கத்துடன் கூறினார்.
அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com