14 வயதில் நான் சந்தித்த இனவெறி: 'மாஸ்டர்' நாயகியின் அதிர்ச்சி பதிவு

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் இனவெறி காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் நடந்த இனவெறி நிகழ்வுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் தனக்கு 14 வயதில் நிகழ்ந்த நிறவெறி, இனவெறி குறித்த நிகழ்வு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

“எனக்கு 14 வயதாக இருக்கும் போது எனது நெருங்கிய நண்பர் ஒருவரை அவரது தாயார் டீ குடிக்கவே விடமாட்டார். ஏனெனில் டீ குடித்தால் தோலின் நிறம் கருப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஒருநாள் அந்த நண்பர் தனது அம்மாவிடம் டீ கேட்டபோது, அவரது அம்மா என்னை காண்பித்து, நீ டீ குடித்தால் அவளை போல் கருப்பாக மாறிவிடுவாய் என்று கூறியது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.

எனது நண்பர் ஒரு அழகான மகாராஷ்டிரா பையன். நான் மாநிறமுள்ள ஒரு மலையாளி. இதுநாள் வரை என்னுடைய நிறத்தை ஒப்பிட்டு யாரும் பேசியது இல்லை என்பதால் எனக்குள் குழப்பம் ஏற்பட்டது. நமது சமுதாயத்தில் இனவெறி, நிறபேதம் என்பது சாதாரணமாகவெ இருந்து வருகிறது என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். கருப்பாக இருப்பவர்களை காலா என்று அழைப்பதும், கருப்பு நிறம் கொண்டவர்களை மதராஸி என்று அழைப்பதும் வட இந்தியர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. தென்னிந்தியர்கள் என்றாலே அனைவரும் கருப்புதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

கருப்பின மக்கள் அனைவரையும் நீக்ரோக்கள் என்றும் அழகற்றவர்கள் என்றும், வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் அனைவரையும் அழகானவர்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர். உலகளாவிய இனவெறி பற்றி நாம் பேசும் போது நம் வீடுகளிலும், நண்பர் வட்டங்களிலும் நம்மைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இனவெறி மற்றும் நிற பேதத்தை ஒழிப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் அன்பான நபராக இருப்பதுதான் உங்களை அழகான மனிதராக்கும். உடலின் நிறம் அல்ல. இவ்வாறு மாளவிகா கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 

View this post on Instagram

When I was 14 yrs old, one of my closest friends at that point told me that his mother never let him drink tea because she had this weird belief that drinking tea darkened ones’ skin complexion, and when he asked for tea once she told him(referring to me) “If you drink tea, you will become dark like her”. He was a fair maharashtrian boy and I was a wheat-ish skinned malayalee girl. The complexion dissimilarity we had had never even occurred to me up until that point. This left me perplexed because it was the first time somebody had made a comment like that with a mean undertone about my skin colour. So much casual racism and colourism exists in our own society. Calling a dark skinned person ‘kala’ is something we see on an everyday basis. The discriminatory behaviour against south-Indians and North-East Indians is also appalling. Dark skinned Indians are jokingly referred to as ‘madrasis’ because for some strange reason these ignorant people think all South Indians are only dark skinned. North-East Indians are almost exclusively only called ‘chinki’, all black people are casually referred to as ‘negros’ and fair people are equated as beautiful and dark skinned people are equated as ugly. While we speak about global racism, we must also become aware about what’s happening around us, in our homes, our friend circles and our society, and do our part in thwarting the obvious as well as the subtle racism and colourism that exists all around us, in our everyday lives. What makes you beautiful is being a good and kind person, and not the colour of your skin. ✊??✊??✊??✊??✊??

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on Jun 2, 2020 at 3:26am PDT

More News

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அடுத்த தமிழ் திரைப்படம்

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்காமல் உள்ளன. மேலும் திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள்

இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தத்தெடுத்த பிரபல நடிகர்

சமீபத்தில் குஜராத்திலிருந்து பீகார் மாநிலம் முசாபூருக்கு தனது 2 வயது குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர், முசாபூர் ரயில் நிலையத்தை அடையும் முன்னரே உயிரிழந்தார்.

விஜய்-ஜிவி பிரகாஷ் கூட்டணி செய்த சாதனை: சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்!

தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் பல சாதனைகள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்

கொரோனா அவசரகால சிகிச்சைக்கு Remdesivir மருந்து!!! ஒப்புதல் வழங்கிய இந்தியா!!!

இதுவரை கொரோனா சிகிச்சைக்கு என்று முறைப்படுத்தப் பட்ட எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப் படாத நிலையில் Remdesivir

ஆம்பன் புயலை அடுத்து இந்தியாவை தாக்க இருக்கும் இன்னொரு சூறாவளி!!!

இந்தியாவின் அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.