பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்!

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

பிக்பாஸ் தமிழ் போலவே கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில வாரங்களாக மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது

இந்த நிலையில் சமீபத்தில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியும் கிட்டத்தட்ட நிறுத்தம் செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி சென்னை ஈவிபியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அதில் ஆறு போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆறு பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா என்ற தகவல் பிக்பாஸ் குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனை அடுத்து தற்காலிகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி சென்ற வருடம் போலவே அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 

More News

அது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சையை கிளப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கங்கையில் பிணங்கள்

எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் ஆக வந்த பிரபலம் ஒருவர் தனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் பிறந்து விட்டார்கள், ஆனால் தனக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் சோட்டாபீம்

கொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை!

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிதாக பதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து

சந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் சந்தானம் தனக்கு கொடுத்த லவ் லெட்டர் குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

போய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தினம் பலியாகி வரும் நிலையில் அகில இந்திய சிம்பு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த குட்லக் சதீஷ் என்பவரும்