கயிற்றில் சிக்கிய சுறா..கை கொடுத்து காப்பாற்றிய மீனவர்கள்..!

  • IndiaGlitz, [Thursday,December 05 2019]

 

மலேசியாவில் கயிற்றில் சிக்கிக் கொண்ட தன்னைக் காப்பாற்றிய மீனவர்களுக்கு சுறா ஒன்று நன்றி கூறிய வீடியோ வெளியாகி உள்ளது.

சரவாக் என்ற இடத்தில் உள்ள பின்டுலு கடற்பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திமிங்கலச் சுறா எனப்படும் மீன் ஒன்று பெரிய அளவிலான கயிறு இறுக்கப்பட்டதால் நீந்த முடியாமல் தவித்தது.இதனைக் கண்ட மீனவர்கள் மீனின் அருகே சென்று கயிற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போ சுறா மிகவும் அமைதியாக இருந்தது. சில நிமிடங்களுக்கு பின்னர் மீனவர்களை கயிற்றை அறுத்து சுறாவை விடுவித்தனர். அடுத்த நொடியில் உற்சாகமடைந்த சுறா தனது வாலை அங்குமிங்குமாகச் சுழற்றி கடல் நீரை விசிறியடித்த காட்சி, நன்றி தெரிவிப்பதுபோல் இருந்தது.

உலகெங்கும் உள்ள கடல்களில் நாட்டில் உள்ள மனிதர்களால் உருவாகும் குப்பைகள் கொட்டப்படுவதால் நீர்வாழ் உயிரினங்கள் இதுபோல் பெரும் சிக்கல்களுக்கு உள்ளாகின்றன. இந்த குப்பைகளால் நீர் வாழ் உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சியே கேள்விக்குறியாகி உள்ளது. குப்பைகளை கடலில் கொட்டாமல் கவனமாக கையாண்டு சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மக்கச்செய்யும் திட்டங்கள் செல்படுத்த வேண்டும் என்பது சுற்று சூழ்நிலை ஆய்வாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது. 

 

More News

ஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய 'தலைவி'

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள அவரது சமாதியில்

தளபதி 64: சாட்டிலைட் உரிமையை அடுத்து டிஜிட்டல் உரிமை வியாபாரமும் முடிந்தது

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்த நிலையில்

நான் வெங்காயம்,பூண்டெல்லாம் சாப்பிடுவதில்லை.. வெங்காய விலையேற்றம் பற்றிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

இந்நிலையில் மக்களவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி.நான்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் கைது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்களால் 15 வயதே ஆன பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தளபதி சொன்னது போல் இதனை டிரெண்ட் செய்யுங்கள்: பிகில் பட நடிகை கோரிக்கை

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான விஜய்யின் 'பிகில்' படத்தின் ஆடியோ விழாவின்போது 'நல்ல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்யுங்கள்,