close
Choose your channels

கார் விபத்து எதிரொலி: யாஷிகா மீது போலீஸ் எடுத்த அடுத்த அதிரடி நடவடிக்கை!

Monday, July 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை யாஷிகா தனது தோழி மற்றும் நண்பர்களுடன் சென்ற கார் நேற்று முன்தினம் நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும், யாஷிகாவும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்துவரும் போலீசார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிடம் விசாரணை செய்ததாகவும் விசாரணையில் யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டியது தான் விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர் கார் ஓட்டும் போது மது அருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் யாஷிகா மீது அதிவேகமாக காரை ஓட்டி உயிரிழப்பு ஏற்பட செய்தல் என்பது உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த அதிரடியாக யாஷிகாவின் ஓட்டுனர் உரிமத்தை போலீசார் பறிமுதல் செய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மாமல்லபுரம் அருகே நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos