குட்டி ரசிகைக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மெகா ஸ்டார் நடிகர்… நெகிழ வைக்கும் புகைப்படம்!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரை நடிகர் மம்முட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நியாபக மறதி எனும் நோய் பெரும்பாலும் முதியவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இந்த நோயால் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையைத் தொலைத்துவிடும் அவலமும் நடக்கிறது. அந்தவகையில் நியாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆராதிகா எனும் சிறுமி சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் மருத்துவர்கள் பேச்சுக் கொடுத்தபோது எனக்கு நடிகர் மம்மட்டியை மிகவும் பிடிக்கும். நாளை எனது பிறந்தநாள். அவருடைய நியாபகங்கள் எனக்கு மறந்துபோவதற்கு முன்பாக அவரைப் பார்த்துவிட வேண்டும் என்று அன்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இதையடுத்து வேலை நிமித்தமாக கொச்சிக்கு வருகை தந்திருந்த நடிகர் மம்முட்டியை தொடர்புகொண்ட மருத்துவர்கள் ஆராதிகாவைப் பற்றி தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக நடிகர் மம்முட்டி தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிறுமி ஆராதிகாவைச் சந்தித்துள்ளார். மேலும் அவருடன் தனது நேரத்தை செலவிட்ட நடிகர் மம்முட்டி சிறுமிக்கு ஆறுதல் கூறியதோடு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்திருந்தார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் மம்முட்டி தனது குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

சன்னிலியோனுக்காக இணையும் விஜய்சேதுபதி - வெங்கட்பிரபு!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்து வரும் தமிழ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'ஓ சொல்றியா' பாடலை அடுத்து ஆண்ட்ரியா பாடிய அடுத்த பாடல்!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா' என்ற ஐட்டம் பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடினார் என்பதும்

முன்னணி தமிழ் நடிகையின் இன்ஸ்டாகிராம் ஹேக்கிங்?

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு தடை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக

4 மொழி திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார்: படப்பிடிப்பு ஆரம்பம்!

மஹா மூவீஸ் நிறுவனத்தின் நான்கு மொழி திரைப்படைப்பான  'சபரி' படத்திற்காக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்!