close
Choose your channels

2வது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!

Friday, November 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருவாரூரில் பகுதியில் 2வது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் இலவங்கார்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த 35 வயது சின்னப்பா என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சித்ரா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார்.. சித்ராவிற்கு ஏற்கனவே திருமணமாகி 17 வயதில் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சித்ராவின் 17 வயது மகளை நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சின்னப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனால் மனமுடைந்த அந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிகிறது. இதுகுறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சின்னப்பாவை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் நீதிபதியின் உத்தரவின் சின்னப்பா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.