போதும் நிறுத்திக்கிடலாம்: கள்ளக்காதலை முடிவுக்கு கொண்டு வர முயன்ற பெண் படுகொலை!

  • IndiaGlitz, [Thursday,April 11 2019]

இத்தனை ஆண்டுகள் இருந்த கள்ளக்காதல் போதும், இத்தோடு நிறுத்திவிடலாம் என்று கூறிய கள்ளக்காதலியை, கள்ளக்காதலன் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உளுந்தூர்பேட்டை அருகே சிறுவத்தூர் என்ற பகுதியை சேர்ந்த 40 வயது விதவைப்பெண் கொடிபவுனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 32 வயது ராமு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த நிலையில் கொடிபவுனின் இரண்டு மகள்களும் விவரம் தெரியும் வயது ஆகிவிட்டதால் கள்ளக்காதலை இத்துடன் நிறுத்தி கொள்ளலாம், இனிமேல் எனது வீட்டுக்கு வராதே என்று கொடிபவுனு ராமுவிடம் கூறியுள்ளார்.

இதனால் ராமு ஆத்திரம் அடைந்தாலும், கொடிபவுனை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் மகள்களுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டால் அசிங்கப்பட நேரிடும் என்பதால் கொடிபவுனு தொடர்ந்து மறுத்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராமு, கொடிபவுனுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்தனர். தப்பியோடிய கொலையாளி ராமுவையும் மூன்றே மணி நேரத்தில் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

அரசியலில் ஆரம்பப் பள்ளியில் இருக்கின்றார்: கமல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி விமர்சனம்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஆட்சி புரிந்து வரும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பிரமுகரும், அம்மாநில முதலமைச்சருமான பினராயி விஜயன்,

நாயகன், நாயகிக்கு முன்னரே ஒப்பந்தமான யோகிபாபு!

பொதுவாக ஒரு திரைப்படம் ஆரம்பிக்கப்படும்போது முதலில் இயக்குனர், நாயகன், நாயகி ஆகியோர் முடிவு செய்த பின்னரே காமெடி நடிகர்கள் உள்பட மற்ற நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம்.

உங்க அப்பா உங்களுக்கு சொல்லித்தரலையா? ஸ்டாலினுக்கு எஸ்.வி.சேகர் கேள்வி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தூத்துகுடி தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரி கனிமொழிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது,

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது!

அமெரிக்காவில் இருந்து தப்பித்து கடந்த சில ஆண்டுகளாக ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது

தவறாக நடக்க முயற்சி: இளைஞரின் கன்னத்தில் பளாரென அறைந்த குஷ்பு!

பெங்களூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு தன்னிடம் தவறாக நடக்க முயற இளைஞர் ஒருவரை பளார் பளாரென அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது