close
Choose your channels

கடனை திருப்பி கேட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது!

Saturday, May 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொடைக்கானல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த நண்பர், அந்த இளம்பெண்ணை லாட்ஜ் அறை ஒன்றில் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது

கொடைக்கானலை சேர்ந்த ரோஜா என்பவரும் அதே பகுதியை சேர்ந்த சசி என்பவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்தனர். சசிக்கு ரோஜா அவ்வப்போது பணம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத சசி, மீண்டும் மீண்டும் ரோஜாவிடம் பணம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் ஆயிரக்கணக்கில் சென்றுவிட, தன்னுடைய மொத்த பணத்தையும் திருப்பித்தருமாறு ரோஜா, சசியிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனையடுத்து வத்லகுண்டு வந்தால் மொத்த கடனையும் தருவதாக ரோஜாவை அழைத்து சென்ற சசி, அங்கு ஒரு லாட்ஜில் அவரை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுத்து மிரட்டியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்படாத ரோஜா, காவல்துறையில் புகார் செய்ய, சசியை போலீசார் கைது செய்து அவர் மீது பாலியல் வன்கொடுமை, பெண்ணை அவமதித்தல், தொழில் நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.