close
Choose your channels

குத்து மதிப்பாக 10 இலக்க எண்கள்: ட்ரூ காலர் மூலம் 50 பெண்களை பலாத்காரம் செய்தவன் கைது!

Friday, January 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ட்ரூகாலரில் குத்துமதிப்பாக 10 இலக்க எண்களை போட்டு அதில் பெண்கள் பெயரில் வந்தால் அந்த எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பெண்களை தனது வலையில் வீழ்த்தி சுமார் 50 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவர் தனது ஓய்வு நேரத்தில் ட்ரூகாலர் மூலம் 10 இலக்க எண்களை பதிவு செய்து அதில் ஏதாவது பெண்கள் பெயர் வந்தால் அந்தப் பெண்ணின் எண்ணை சேமித்து கொண்டு அவர்களை காதல் வலையில் விழ வைப்பதே பகுதிநேர தொழிலாக செய்துள்ளார்.

அவ்வாறு தனது வலையில் விழும் பெண்களுக்கு ஆபாசமான படங்கள் வீடியோக்களை அனுப்பி அவர்களிடம் உரையாடுவது அதன்பின் நட்புடன் பழகுவது பின்னர் போலியாக காதல் செய்வது ஆகியவைகளை நிகழ்த்தி அதன் பின்னர் அந்தப் பெண்ணை நேரில் வரவழைத்து தனது பாலியல் இச்சையையும் தீர்த்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த வகையில் சுமார் 50 பெண்கள் வினோத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு கல்லூரி மாணவியிடமும் வினோத் தன் வேலையை காட்ட அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வினோத்தை கைது செய்தனர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.