மனித முகமே எனக்கு வேண்டாம்… விரக்தியில் இளைஞர் செய்த காரியம்!

  • IndiaGlitz, [Wednesday,January 12 2022]

ஜெர்மனியில் மனித முகத்தோற்றத்தையே விரும்பாத இளைஞர் ஒருவர் ஒட்டுமொத்த முகத்திலும் பச்சை குத்தி, முகத்தையே மாற்றி வைத்திருக்கும் சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முதுமையிலும் இளமையாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பலரும் பியூட்டி பார்லர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால் ஜெர்மனியில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தனக்கு அழகு வேண்டாம். மனித முகத்தையே நான் விரும்பவில்லை எனக் கூறி தனது ஒட்டுமொத்த முகத்திலும் Puzzle அட்டையைப் போன்று பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். மேலும் புதுமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக தனது நாக்கை இரண்டாக வெட்டி அதையும் பச்சை நிறத்திற்கு மாற்றியிருக்கிறார்.

மேலும் வெள்ளையாக இருக்கும் தனது கண்களை கருப்பு மைக்கொண்டு பச்சைக்குத்தி அதன் நிறத்தையும் மாற்றியிருக்கிறார். இதனால் 26 வயதான அந்த இளைஞர் பார்ப்பதற்கே விசித்திரமாக இருக்கிறார்.

ஆனால் இதுகுறித்துப் பேசிய அந்த இளைஞர் எனது சிறுவயதில் இருந்தே என்னுடைய முகத்தில் மாற்றங்களை செய்துகொள்ளவேண்டும் என விரும்பினேன். தற்போது 12 லட்சங்களைச் செலவு செய்து முகத்தை மாற்றியிருக்கிறேன். ஆனால் இந்த மாற்றங்கள் எனக்குப் போதுமான மனத்திருப்தியைத் தரவில்லை. எனவே எதிர்காலத்தில் உடல் அமைப்பையும் மாற்ற முயற்சிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த விசித்திரச் சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

கணவர் தற்கொலை, 7,200 கோடி கடன்… தனி மனுஷியாக சாதித்த மாளவிகா ஹெக்டே!

இந்தியா முழுக்க தனது கடைகளைப் பரப்பி கொண்டிருக்கும் Café Coffee day நிறுவனத்தின் தலைவர் கடந்த 2019 ஜுலை 29 ஆம்

அருமையான பயணம் இது… சொந்த அண்ணனை வாழ்த்திய நடிகர் ஜெயம்ரவி!

சினிமா உலகில் எடிட்டரும் தயாரிப்பாளருமாக வெற்றிகரமான பயணத்தை கொண்டிருந்தவர் மோகன். இவரது

இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு 70 வயதா? ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய ஒரு புகைப்படம்!

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம்வரும் நடிகர்

ஐபிஎல்-இல் அதிகச் சம்பளம் வாங்கிய முன்னணி வீரர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் அனைத்துவித கிரிக்கெட்

பன்றியின் இதயம் மனிதனுக்கு பொருத்தப்பட்டதா? மருத்துவ உலகில் புது திருப்பம்!

அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு