ஊரடங்கால் மனைவியை பிரிந்த கணவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் ஒருசில உயிர்களும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு நடந்தே சென்றவர்கள் உயிரிழந்தது, மதுக்கடைகள் மூடப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டவர்கள் போன்ற தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கோண்டா போன்ற பகுதியை சேர்ந்த 32 வயது ராகேஷ் என்பவரின் மனைவி ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் தனது தாயார் வீட்டுக்கு சென்றார். திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் அவரால் தனது கணவரின் வீட்டிற்கு திரும்ப வர முடியவில்லை.

இந்த நிலையில் தன்னுடைய மனைவியை 2 வாரத்துக்கு மேலாக சந்திக்காமல் இருந்த ராகேஷ் கடந்த சில நாட்களாக மனமுடைந்து மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் பிரிவைத் தாங்காமல் ராகேஷ் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ஊரடங்கு உத்தரவு காரணமாக இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

நியூஜெர்ஸியில் ரொம்ப மோசம்: சுந்தர் சி நாயகியின் பதட்டமான வீடியோ

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் மிக அதிகமாக இருந்து வருகிறது என்பதும், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தற்போது உச்சகட்டத்தில் இருப்பதால்

கொரோனாவை கட்டுப்படுத்த கட்டாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் ICMR அறிவிப்பு!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானியான ராமன் கங்காகேத்கர் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று இன்னும் மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட 30க்கும் மேற்பட்ட டெல்லி எம்ய்ஸ்  மருத்துவர்கள், பணியாளர்கள்!!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 72 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்

சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்த தம்பதியினருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து

கொரோனா தடுப்பு நிதியாக அட்லி கொடுத்த தொகை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா தொழிலாளர்கள்