இறந்த பின்பு குறட்டை விட்டு தூங்கிய நபர்… மருத்துவர்களே வியந்துபோன அதிசயம்!
- IndiaGlitz, [Monday,July 26 2021]
ஸ்பெயின் நாட்டில் சிறையில் இருந்த ஜிமென்ஸ் எனும் நபர், உயிரிழந்த நிலையில் உடல் ஜில்லிட்டு கிடந்துள்ளார். அவரை பரிசோதித்த 3 மருத்துவர்களும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இறந்த அவரின் உடலை பிணக்கிடங்கில் வைத்து இருந்தபோது அத்தனை குளிர் மற்றும் சவப்பெட்டியையும் தாண்டி குறட்டைச் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அதிர்ந்துபோன மருத்துவர்கள், இறந்த நபரின் சவப்பெட்டியை திறந்து ஜிமென்ஸின் உடலை பரிசோதித்துள்ளனர். அப்போதுதான் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜிமென்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2018 ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் குறித்து அன்றைக்கே மருத்துவ உலகம் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து ஜிமென்ஸ்க்கு என்ன நடந்து இருக்கும் என்பதை குறித்து மருத்துவர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், ஜிமென்ஸ்க்கு திடீரென வலிப்பு அல்லது கேடலெப்சி எனும் டிரான்ஸ் நோய் வந்து இருக்கலாம். இதனால் அவர் தனது உடலை அசைக்க முடியாமல் உணர்வற்ற நிலைக்குச் சென்றிருக்கலாம். இப்படியான டிரான்ஸ் நோய் வரும்போது ஒருவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இறந்துவிட்டதாக முடிவு செய்யப்பட்ட ஜிமென்ஸ் குறித்த விவகாரம் இன்றைக்கும் மருத்துவ உலகில் ஒரு விசித்திர சம்பவமாகக் கருதப்படுகிறது