close
Choose your channels

தலைக்கு அருகே செல்போனுக்கு சார்ஜ்: வெடித்து சிதறியதால் பரிதாபமாக பலியான இளைஞர்!

Tuesday, November 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூங்கும் போது தலைக்கு அருகில் தனது மொபைல் போனை சார்ஜ் போட்டு இருந்த நிலையில் அந்த மொபைல் போன் திடீரென வெடித்து சிதறியதில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் பகுதியில் குணா பிரதான் என்ற இளைஞர் கட்டிட வேலை செய்து வருகிறார். அங்குள்ள புகழ்பெற்ற கோவில் ஒன்றின் பராமரிப்பு பணிகளில் பணிக்காக அங்கேயே தங்கி வேலை பார்த்து வரும் குணா, தினமும் வேலை முடிந்தவுடன் அருகில் உள்ள அறையில் சக கட்டிட தொழிலாளர்களுடன் தங்குவார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு இரவு வேலை முடிந்த பின்னர் மொபைல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தனது தலைக்கு அருகில் வைத்து விட்டு தூங்கியுள்ளார். அந்த போன் நீண்ட நேரமாக சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென வெடித்து சிதறியது. இதனால் செல்போன் அருகிலேயே தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்த குணாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சக கட்டிட தொழிலாளிகள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

செல்போனை தூங்கும்போது சார்ஜ் போட்டு அதனை தலைக்கு அருகில் வைக்கக்கூடாது என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டு இருந்தும் இது மாதிரியான மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது வருத்தத்திற்குரியது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos