close
Choose your channels

அம்மாவைப் போல வேடம் போட்டு ஓட்டுநர் உரிமம் வாங்க சென்ற மகன்..!

Saturday, December 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரேசிலில், தனது தாயார் ஓட்டுநர் உரிமம் பெரும் தேர்வில் மூன்று முறை தோல்வியுற்றதால் மகனே தாயைப் போல வேஷமிட்டு தேர்வுக்கு போன சம்பவம் ஓன்று நிகழ்ந்துள்ளது.

பிரேசிலைச் சேர்ந்தவர் மார்சிவிஸ் ஸ்கியாவோ இவரது தாயார் டோனா மரியா தன்னுடைய ஓட்டுநர் உரிமம் வாங்கும் தேர்வில் மூன்று முறைக்கு மேலே தோல்வியடைந்துவிட்டார். இதனையறிந்த மகன் அம்மாவிற்கு தெரியாமலேயே அவரது சான்றிதழ்களையும் அடையாள அட்டையையும் எடுத்துக் கொண்டு தாயைப் போல வேடமிட்டு ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கு சென்றுள்ளார்.

முதலில், வேடமிட்டு வந்த ஸ்கியோவோவை இந்த பெண்மணி குடித்துவிட்டு வந்திருப்பாரோ என தேர்வு அதிகாரிகள் சந்தேகப்பட்டுள்ளனர். பின்னர் அடையாள அட்டையைப் பார்க்கும் போது அதில் இருந்த புகைப்படத்துதடன் இவரது முகம் கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. எனவே காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்குள் ஸ்கியாவோ பார்க்கிங் டெஸ்ட்டை முடித்துவிட்டார். இந்நிலையில் அங்கு வந்த பிரேசில் இராணுவ போலீஸ் அவரை கைது செய்து விசாரித்தது.

அப்போது தான் தாய்க்கு தெரியாமல் மகன் வேடமிட்டு வந்திருப்பது அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது. அரசினை ஏமாற்ற முயன்ற குற்றத்திற்காக ஸ்கியோவோ இப்போது சிறையில் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.