விமானத்தில் இருந்து விழுந்தும் நொறுங்காத மொபைல்… எது தெரியுமா???

  • IndiaGlitz, [Friday,December 18 2020]

 

2 அடி தூரத்தில் இருந்து விழுந்தாலே போதும் நமது செல்ல மொபைல் போன்கள் பலத்த அடி வாங்கும். அப்படி இருக்கும்போது 2,000 ஆயிரம் அடி உயரத்தில் அதுவும் விமானத்தில் இருந்து வேகமாக விழுந்த ஒரு ஐபோன் தப்பி பிழைத்து இருக்கிறது. மேலும் சேதம் எதுவும் ஏற்படாமல் அப்படியே இருப்பதுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரேசில் நாட்டை சேர்ந்த ஆவணப்படத் தயாரிப்பாளர் எர்னஸ்டோ கலியோட்டோ, விமானம் மூலம் ரியோ டிஜெனிரோ நகரத்தின் கபோ ஃப்ரியோ கடற்கரைக்கு மேலே சுமார் 2,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது ஜன்னலுக்கு வெளியே கையை நீட்டி புகைப்படம் எடுக்கத் தொடங்கி இருக்கிறார். அப்போது காற்று வேகத்தின் காரணமாக அவரது கையில் இருந்த ஐபோன்6 தவறி கீழே விழுந்து விட்டது. இந்நிலையில் எப்படியும் தனது மொபைலை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் பைனாகுலரை வைத்துக்கொண்டு தாழ்வாக பறந்தபடியே தேடி இருக்கிறார்.

எப்படியோ ஒரு வழியாக தனது ஐபோனை கண்டும் பிடித்து இருக்கிறார். ஆனால் எதற்கு உதவாத நிலையில் இருக்கும் என நினைத்த அவருக்கு பெரிய ஷாக்கே ஏற்பட்டு இருக்கிறது. அதாவது 2,000 அடி உயரத்தில் இருந்து படு வேகமாக விழுந்த ஐபோன்6 எந்த சேதாரமும் இல்லாமம் தப்பி பிழைத்து இருக்கிறது. இதனால் அந்நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த அவர் தனது ஐபோன் அனுபவத்தைப் பற்றி ஒரு வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ கடும் வைரலாகி வருகிறது.

More News

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு?

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராக

ஹலோ துபாயா? மார்க் இருக்காரா? யாரை கலாய்க்கிறார் கீர்த்தி சுரேஷ்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையும், 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவருமான கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த'

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பாதிக்காது… விளக்கம் அளிக்கும் தமிழக அரசு!!!

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாண் சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வந்தது.

ஒரு வருடமா கடலில் மிதந்த ரூ.600 கோடி மதிப்பிலான கொக்கைன்… பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

பசிபிக் தீவு அருகே உள்ள மார்ஷல் தீவு அருகே கடந்த செவ்வாய்கிழமை அன்று 649 கிலோ மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப் பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் மீண்டும் பாதிப்பு… பதைக்க வைக்கும் தகவல்!!!

அமெரிக்காவின் பைஃசர் மற்றும் பயோன் டெக் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த கடந்த 7 ஆம் தேதி பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது.