close
Choose your channels

பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க மனைவியை கட்டாயப்படுத்திய கணவர் கைது: அதிர்ச்சி காரணம்!

Tuesday, August 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க மனைவியை கட்டாயப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டிருப்பது புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே அருகே ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள 38 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால் அவர் ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அந்த சாமியார் ஒரு சில மந்திரங்களை கூறிய பின்னர் தொழிலதிபரின் மனைவி நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு குளித்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க முடியாது என்று கூறியதை அடுத்து கணவர் அவரை கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இதனை அடுத்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர், கணவரின் தந்தை, தாய் மற்றும் இன்னொரு பெண் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி கடந்த 2013ம் ஆண்டு முதல் வரதட்சணை கேட்டு தன்னை தனது மாமியார் கொடுமைப்படுத்தியதாகவும், ஆண் குழந்தை பிறக்காத காரணத்தினால் குடும்பமே தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார். மேலும் தனது சொத்தில் போலி கையெழுத்து போட்டு 75 லட்ச ரூபாய் தனது கணவர் கடன் வாங்கி விட்டதாகவும், தனது நகைகளையும் வியாபார நோக்கத்திற்காக பறித்துக் கொண்டதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

மனைவியின் புகாரின் அடிப்படையில் கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியை நிர்வாணமாக பொது இடத்தில் குளிக்க கட்டாயப்படுத்திய கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.