ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்: இளம்பெண் பலியான பரிதாபம்

  • IndiaGlitz, [Tuesday,February 20 2018]

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், இதன்மூலம் ஏற்படும் ஒருசில தீமைகளால், சிலசமயம் உயிர்ப்பலியும் ஏற்படும் கொடுமை நடந்து வருகிறது.

மும்பையை சேர்ந்த 21 வயது ஹரிதாஸ் என்பவரும், 20வயது அங்கிதாமோர் என்பவரும் ஃபேஸ்புக்கில் நட்பாகி கடந்த சில நாட்களாக மணிக்கணக்கில் சாட் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்த ஹரிதாஸ், கடந்த ஞாயிறு அன்று தனது வீட்டிற்கு நேரில் வருமாறு அங்கிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அங்கிதாவும் நட்பு முறையில் சந்திக்க சென்றுள்ளார். இருவரும் சில நிமிடங்கள் நட்பாக பேசிய நிலையில் திடீரென அங்கிதாவிடம் ஹரிதாஸ் தவறாக நடக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் அவரிடம் இருந்து அங்கிதா தப்பிக்க முயற்சிக்கையில் ஷூ லேஸ் மூலம் அங்கிதா கழுத்தை இறுக்கி கொலை செய்து, பிணத்தை அந்த கட்டிடத்தின் பின்னால் வீசியெறிந்துள்ளார்.

இந்த கொலை குறித்த தகவல் அறிந்தவுடன் போலீசார் செய்த விசாரணையில் ஹரிதாஸை போலீசார் கைது செய்தனர். தவறான நட்பால் ஒரு இளம்பெண்ணின் உயிர் பரிதாபமாக பலியானது கொடுமையான சம்பவமாக பார்க்கப்படுகிறது.