இளம் பெண்ணை கடத்தி 14 வருடம் செக்ஸ் அடிமையாக வைத்திருந்த காம கொடூரன்?

  • IndiaGlitz, [Thursday,August 03 2023]

ரஷ்யாவில் 19 வயதாக இருக்கும்போது காமக் கொடூரன் ஒருவரிடம் மாட்டிக்கொண்ட இளம்பெண் 33 வயதில் தப்பித்து வெளியே வந்த நிலையில் நெஞ்சை உறைய வைக்கும் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் வசித்துவந்த எகடெரினா எனும் 19 வயது இளம் பெண் ஒருவரிடம் விளாடிமிர் செஸ்கிடோவ் என்பவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் வீட்டிற்கு வா, மது அருந்தலாம் என்று கூப்பிட்டதால் அதைக் கேட்டு அவருடன் சென்ற எகடெரினாவை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். எப்போதும் படுக்கை அறைக்குள்ளேயே வைத்திருந்த நிலையில் எப்போதாவது ஓய்வறைக்கு வந்தாலும் கத்தி முனையிலேயே மிரட்டி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 14 வருடங்களுக்குப் பிறகு 51 வயதான செஸ்கிடோவ் தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வீட்டை விட்டு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறி இளம்பெண் எகடெரினா தன்னை 14 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்ததாகவும் 1,000 முறைக்கும் மேலாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

மேலும் படுக்கை அறையை விட்டு எதாவது விஷயங்களுக்காக வெளியே வந்தாலும் கத்தி முனையிலேயே தன்னை வைத்திருந்ததாகக் கூறிய அவர் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் தன்னை அரக்கத்தனமாக அவர் அடித்துத் துன்புறுத்தினார். என்னைத் தவிர கடந்த 2011 இல் வேறொரு பெண்ணையும் பாலியல் அடிமையாக அழைத்து வந்தார். ஆனால் அந்தப் பெண் செஸ்கிடோவிடம் சண்டைப் போட்டதால் அடித்தே அந்தப் பெண்ணை கொன்றார் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து செஸ்கிடோவின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் வீட்டின் அடிப்பகுதியில் இருந்து மனித எலும்புகளைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருடைய வீட்டில் செக்ஸ் பொம்மைகள், பாலியல் வீடியோக்கள் அடங்கிய சிடிக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து இளம்பெண்ணை கடத்தி 14 வருடங்களாக பாலியல் அடிமைப்போன்று நடத்திய குற்றத்திற்காக செஸ்கிடோ கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய மனநலம் பாதிப்படைந்து இருப்பதால் தற்போது மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 19 வயதில் கடத்தப்பட்ட இளம்பெண் 33 வயதில் பல கொடுமைகளுக்குப் பிறகு வெளியே வந்திருக்கும் சம்பவம் பலரது நெஞ்சை பதற வைத்திருக்கிறது.

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 7.. கமல்ஹாசனின் சம்பளம் இத்தனை கோடியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 6 சீசன்களாக ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் 7வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் முதல் சீசன் முதல் 6வது சீசன் வரை

2 பாகங்களில் முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு படம்.. விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்..

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தில்

'நாளைக்கு நான் ஊருக்கு போகணும்'.. பிரபுதேவாவின் 60வது படம் 'வுல்ஃப்'  டீசர்..

பிரபுதேவா நடித்து வரும் 60வது திரைப்படமான 'வுல்ஃப்'  படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

பாஜகவில் இணைந்தார் விஜய்யின் 'வாரிசு' பட நடிகை.. தேர்தலில் போட்டியா?

விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைந்துள்ளார்.  

முயற்சியை கைவிடாதீங்க… 35 முறை தோல்வியை சந்தித்த இளைஞர் ஐஏஎஸ் ஆன சுவாரசியம்!!

போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது என்பது அவ்வளவு எளிதான கரியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்