close
Choose your channels

அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு: பொங்கல் தினத்தில் வெட்டி கொல்லப்பட்ட வாலிபர்

Friday, January 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 26 வயது வாலிபர் ஒருவர் பொங்கல் தினத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரமேரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த தசரதன் என்பவருக்கும் அஸ்வினி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என தெரிகிறது. இந்தநிலையில் தசரதன் வீட்டிற்கு அடிக்கடி மதன் என்பவர் என்று அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவருக்கும் தசரதன் மனைவி அஸ்வினிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் திடீரென ஒருநாள் மாயமாகினர். இதுகுறித்து தசரதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அஸ்வினி மற்றும் மதன் ஆகியோர் தேடப்பட்டு வந்த நிலையில் திடீரென மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக அஸ்வினி தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும் கூறிவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தசரதன் ஆத்திரத்தில் இருந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மதன் உத்திரமேரூர் திருப்பியுள்ளார் இதனை அடுத்து தசரதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதனை வெட்டிக்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தசரதன் மற்றும் அவரது நான்கு நண்பர்களையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.