close
Choose your channels

மனைவியை கொலை செய்துவிட்டு 2000கிமீ பயணம் செய்து மாமியாரையும் கொன்ற நபர்: அதிர்ச்சி தகவல்

Tuesday, June 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதன் பின்னர் சுமார் 2000 கிலோ மீட்டர் பயணம் செய்து மாமியாரையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த அமித் அகர்வால் என்ற 41 வயது நபருக்கு ஷில்பா என்ற மனைவியும் 10 வயது குழந்தையும் உள்ளனர். இந்த தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்ய முடிவு செய்து இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென பெங்களூரில் உள்ள தனது மனைவியை கொலை செய்த அமித் அகர்வால், அதன் பின்னர் பெங்களூரில் இருந்து சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொல்கத்தாவுக்கு பயணம் செய்தார். அங்கு தனது மனைவியின் தாயாரையும் சுட்டு கொலை செய்து விட்டு அங்கேயே தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் கொல்கத்தா போலீசாருக்கு தெரிய வந்ததும் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர் தற்கொலை செய்துகொண்ட அமித் அகர்வாலின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில் தான் பெங்களூரில் உள்ள தனது மனைவியையும் கொலை செய்துவிட்ட குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து கொல்கத்தா போலீசார் பெங்களூரு போலீஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து பெங்களூர் போலீசார் அமித் அகர்வால் வீட்டிற்கு சென்று, சமையலறையில் இருந்த அமித் அகர்வாலின் மனைவி ஷில்பாவின் பிணத்தை கைப்பற்றினர்.

மனைவியை கொலை செய்துவிட்டு சுமார் 2,000 கிலோ மீட்டர் பயணம் செய்து மாமியாரை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.