close
Choose your channels

மனைவியை கொன்று தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய கணவன் கைது!

Wednesday, December 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனைவியை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே என்ற பகுதியில் துஷார் சாம்ரே என்பவருக்கும் காஞ்சன் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் ஆகியும் அவர் அவ்வப்போது தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் துஷார் சாம்ரேவுக்கும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை தனது மனைவியிடம் மீண்டும் ரூபாய் ஒன்றரை லட்ச ரூபாய் அவருடைய தந்தையிடம் இருந்து பெற்று வருமாறு கொடுமைப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுக்கவே ஆத்திரமடைந்த துஷார் சாம்ரே, தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து வலி தாங்க முடியாமல் மயக்கமுற்ற மனைவி காஞ்சன், பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த துஷார் சாம்ரே, உடனே மனைவியின் பிணத்தை சிலிங் ஃபேனில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகம் ஆடியுள்ளார். ஆனால் காஞ்சனின் பெற்றோர்கள் தங்களது மகல் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது கணவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்க இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து துஷார் சாம்ரேவை விசாரணை செய்தனர். விசாரணையில் தனது மனைவியை கொன்றதாக துஷார் சாம்ரே ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.