close
Choose your channels

செல்போன் அழைப்பை எடுக்காத காதலி: சோகத்தில் 3வது மாடியில் இருந்து குதித்த சென்னை வாலிபர்!

Saturday, September 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் திடீரென அந்தப் பெண் காதலை முறித்துக் கொண்டதால் ஏற்பட்ட சோகத்தில் 3வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த 22 வயதான துரை, ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் ஒரு பெண்ணை துரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திடீரென அந்தப் பெண் காதலை முறித்துக்கொண்டார். அடிக்கடி துரையை நேரில் சந்தித்து வந்த காதலி, திடீரென நேரில் சந்திப்பதை தவிர்த்து மொபைல் போனில் மட்டும் பேசி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மொபைல் போனிலும் அவர் தொடர்பு கோள்ளவில்லை.

துரை செல்போன் மூலம் அழைத்தாலும் அவரது செல்போன் அழைப்பையும் அவரது காதலி தவிர்த்து வந்ததாக தெரிகிறது. பலமுறை காதலியிடம் தொடர்பு கொண்டும் அவர் செல்போன் அழைப்பை ஏற்க மறுத்ததால் சோகமான துரை, அருகில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

மூன்றாவது மாடியில் இருந்து குதித்து இரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் மயக்கமுற்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். துரையின் காதலிடமும் போலீசார் விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos