சானிடைசர் தடவிய கையில் சிகரெட்… உடல் முழுவதும் தீப்பற்றிய பரிதாபம்!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

கொரோனா நேரத்தில் சானிடைசர் போன்ற கிருமிநாசினி பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. மேலும் இதுபோன்ற சானிடைசர் பொருட்களைப் பயன்படுத்தும்போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்துத் தொடர்ந்து மருத்துவர்கள் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனாலும் சானிடைசர் தடவிய கையால் அடுப்பைப் பற்ற வைத்து சிலரின் கைகள் பொசுங்கிய நிகழ்வுகளும் அரங்கேறின.

அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது சென்னையில் நடைபெற்று இருக்கிறது. சென்னை அசோக் நகர் பகுதியில் கார்பெண்டர் தொழில் செய்துவரும் ரூபன் (50) நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு வந்தவுடன் கைகளை சானிடைசர் போட்டு சுத்தம் செய்துள்ளார். அப்போது சிறிதளவு சானிடைசர் அவரது சட்டையிலும் கொட்டி இருக்கிறது. இதைப் பொருட்படுத்தாத ரூபன் கழிவறைக்குச் சென்று சிகரெட்டை பற்ற வைத்துள்ளார்.

சிகரெட்டை பற்ற வைத்தவுடன் அவரது சட்டை மற்றும் கைகளில் நெருப்பு பற்றி தீ மளமளவென உடல் முழுவதும் பரவ ஆரம்பித்து இருக்கிறது. இதனால் பதறிப்போன ரூபன் உதவிக்காக கதறியிருக்கிறார். உடனே வீட்டில் இருந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு அவரை மீட்டுள்ளனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்துவிட்டதால் தற்போது ரூபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வென்ற பொள்ளாச்சி சிறுமி… குவியும் பாராட்டு!

பொள்ளாச்சியைச் சேர்ந்த சிறுமி வர்ணா 7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார்

தமிழ் திரைப்பட நடிகர்-தயாரிப்பாளர் தூக்கில் தொங்கி தற்கொலை!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணக்கோலத்தில் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 

மாரிசெல்வராஜ்ஜின் கர்ணன் திரைப்படம் வரலாற்றைத் தவறாகச் சித்தரிக்கிறதா?

கர்ணன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே அது "கொடியன்குளம்" வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு

ஐபிஎல் கிரிக்கெட் கமெண்ட்ரியில் 'வலிமை' அப்டேட் கேட்ட வர்ணனையாளர்!

ஐபிஎல் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதும் நேற்றுடன் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது