close
Choose your channels

கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகனுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு… வைரல் தகவல்!

Tuesday, March 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டிவிட்டது. மேலும் நேற்று ரூ.25 அதிகரிக்கப்பட்ட சமையல் எரிவாயு விலை இன்று அதோடு கூடுதலாக ரூ.15 அதிகரித்து இருக்கிறது. இதனால் காய்கறி மற்றும் அத்யாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து நாட்டில் பணவீக்கம் தலைத்தூக்கத் தொடங்கி விட்டது. இந்நிலைமைக்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய விதத்தில் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒருபடி மேலே போய் சிலர் திருமண விழாக்களில் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை பரிசு பொருளாகக் கொடுத்தும் கவனம் ஈர்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூரில் ஒரு தனியார் பெட்ரோல் நிறுவனம் 10 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கி வந்தது. இப்படி நடுத்தர குடும்பங்கள் உள்ளிட்ட பலரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வை குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் தொடர் போட்டியின்போது ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரருக்கு அந்த விழா குழு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாகக் கொடுத்து கவனம் ஈர்த்து இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தத் தகவலை நெட்டிசன்கள் முதலில் மீம்ஸாக மட்டுமே கருதி வந்தனர். ஆனால் உண்மையில் ஆட்டநாயகனுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு கொடுக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 லிட்டர் பெட்ரோலை சலாவுதீன் என்ற அதிஷ்டசாலி வீரர் பெற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.