மனைவி, குழந்தைகளைப் பார்க்க வேண்டும்? அசால்ட்டா பேருந்தையே திருடிய இளைஞர்!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாகப் தற்போது பல்வேறு மாநிலங்களில் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து எதுவும் செயல்படாமல் இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ஒரு இளைஞர் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பேருந்தையே திருடிச் சென்றதோடு வழியில் உள்ள போலீஸாரையும் ஏமாற்றிய சம்பவம் படு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவின் பதனாம்திட்டா பகுதியில் வசித்து வருபவர் பினூப். இவர் வேலை காரணமாக 4 மாவட்டங்கள் தாண்டி வசித்து வருகிறார். ஆனால் மனைவி, குழந்தைகள் அனைவரும் பதனாம்திட்டாவில் இருக்கின்றனர். தற்போது கேரளாவில் தீடிரென போடப்பட்ட ஊரடங்கினால் பினூப் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. இதனால் மனைவி குழந்தைகளைப் பார்க்க முடியாமல் தவித்துப்போன பினூப் கோழிக்கோட்டில் நின்றிருந்த பேருந்து ஒன்றை அசால்ட்டாக திருடி உள்ளார்.

கோழிக்கோட்டில் இருந்து மலப்புரம், திருச்சூர், கோட்டயம், குமரகம் என 4 மாவட்டங்களைக் கடந்து பேருந்தையும் ஓட்டிச் சென்றுள்ளார். இதற்கிடையில் வழியில் நின்றிருந்த காவலர்கள் பினூப்பை விசாரிக்கவும் செய்துள்ளார். ஆனால் பினூப் இதற்கு கொஞ்சமும் யோசனை செய்யாமல் பதனாம்திட்டாவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு அதிகாரிகள் என்னை அனுப்பி உள்ளனர் எனப் பொய் கூறி இருக்கிறார்.

இதை நம்பிய 4 மாவட்ட காவலர்களும் பினூப்பை வழி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சந்தேகம் அடைந்த குமரகம் போலீஸார் பினூப்பிடம் கெடுபிடி காட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன பினூப் ஒருவழியாக உண்மையை ஒப்புக்கொண்டு பேருந்தை ஒப்படைத்து உள்ளார். கொரோனா ஊரடங்கில் பலரும் வேலை வாய்ப்பை இழந்து, குடும்பத்தை விட்டு தள்ளி இருக்கும் சூழலில் இதுபோன்ற சுவாரசிய சம்பவமும் நடைபெற்று இருப்பது பலரையும் வியக்க வைத்து இருக்கிறது.

More News

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் 'டாக்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து மார்ச் மாதம் ரிலீசாக

காதலருடன் நெருக்கம்: ஸ்ருதிஹாசனின் லாக்டவுன் ஸ்பெஷல் புகைப்படங்கள்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'ஏழாம் அறிவு' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

'அண்ணாத்த' படப்பிடிப்பின்போது ரஜினியுடன் செல்பி எடுத்த நண்பரின் மகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

சங்கீதா-க்ரிஷ் தம்பதிக்கு இவ்வளவு பெரிய மகளா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான சங்கீதா கடந்த 1997ஆம் ஆண்டு முதல் நடித்து வந்தாலும் 2003ஆம் ஆண்டு வெளியான பாலாவின் 'பிதாமகன்' தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது.

ரிலீசுக்கு தயாராகிறது 'குக் வித் கோமாளி' தர்ஷாவின் திரைப்படம்!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்'களும் சரி கோமாளிகளும் சரி மிகப்பெரிய அளவில் பிரபலமானது மட்டுமன்றி அதில் உள்ள பலருக்கும் திரையுலக வாய்ப்புகளும் கிடைத்துள்ளது