முகக்கவசத்தில் வைத்து தங்கம் கடத்திய பலே கில்லாடி… சுங்கத் துறையிடம் மாட்டிக்கொண்ட பரபரப்பு!!!cc

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

 

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் கேரளாவில் நடைபெற்ற தங்கக்கடத்தல் சம்பவத்தில் அம்மாநிலத்தின் பல அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதனால் கேரளாவின் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுங்கத்துறை கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் கேரளாவில் உள்ள கரிபுரம் விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஒரு விமானம் வந்திருக்கிறது. அந்த விமான பயணிகளை சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒருவர் முகக்கவசத்தில் வைத்து 40 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததைக் கண்டுபிடித்து உள்ளனர். இதனால் அந்தப் பயணி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் உத்தரகன்னட மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதால் அதில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்திருக்கிறார். N95 வால்வு மாஸ்கின் துளையில் மறைத்து வைக்கப்பட்ட தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.

More News

UP யில் மற்றொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்!!! நாடு முழுவதும் அதிர்ச்சி அலை…

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி

திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசின் அறிவிப்பு குறித்து கடம்பூர் ராஜூ கருத்து!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கில் அமல்படுத்தப்படும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

வெற்றிமாறன் - கௌதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

அமேசான் பிரைம் ஓடிடிக்காக தயாரான ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றின் டைட்டில் 'புத்தம் புது காலை' என்று வைக்கப்பட்டிருந்த செய்தி குறித்து நேற்று பார்த்தோம்.

நயன்தாராவுக்கு திமுகவின் உறுப்பினர் அட்டை: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்!

கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் திமுக-வில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் 72 லட்சம் பேர் திமுகவில் உறுப்பினராக இணைந்து உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது 

தனுஷ்-சிம்பு பட தயாரிப்பாளர் மாரடைப்பல் மரணம்!

விக்ரம், தனுஷ், சிம்பு உள்பட பிரபல நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த்  திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது