close
Choose your channels

நடுரோட்டில் கொள்ளை முயற்சி: கணவரை காப்பாற்றிய இளம்பெண்ணின் வீரம்!

Friday, July 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெங்களூரில் நடுரோட்டில் திடீரென கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றபோது கணவரை அவரது மனைவி வீரமுடன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் உள்ள ஒரு பாலத்தில் இளம் தம்பதியர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் அவர்களது காரை வழிமறித்தனர். அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்துக் கொண்டு காரில் இருந்தவர்களை நோக்கி வந்தார். காரில் இருந்த இளைஞரின் கழுத்தில் இருந்த செயின் மற்றும் மோதிரம் உள்ளிட்டவற்றை பறிக்க அந்த கொள்ளையன் முயற்சித்த போது அந்த இளைஞர் கொள்ளையரை தடுத்தார். இதனால் அவரது முகம் கழுத்து ஆகிய இடங்களில் கொள்ளையன் கத்தியால் குத்தினார்.

இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட பக்கத்தில் உட்கார்ந்து இருந்த அவரது மனைவி திடீரென காரின் கியரை மாற்றி ஆக்சிலேட்டரை அழுத்தினார். கார் வேகமாக நகர ஆரம்பித்ததால் காரின் முன்னால் இருந்த பைக்கின் மீது மோதியதால் அந்த பைக்கில் இருந்த கொள்ளையன் ஒருவன் கீழே விழுந்தான். இதனை சிறிதும் எதிர்பாராத கொள்ளையர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர். அதன் பின்னர் காயமடைந்த கணவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அவரது மனைவியே சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை நடந்து கொண்டிருந்த இக்கட்டான நிலையில் கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்து, கணவரையும் காப்பாற்றிய இளம் பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.