close
Choose your channels

2 நாட்களுக்கு முன் ரிலீஸான தமிழ் படத்தின் தயாரிப்பாளருக்கு கொரோனா!

Monday, April 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வெள்ளியன்று ரிலீஸான தமிழ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வெள்ளியன்று யோகி பாபு நடிப்பில் உருவான ’மண்டேலா’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. தேர்தல், அரசியல் கதையம்சம் கொண்ட இந்த படம் திரைப்படம் மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் வெளியாகி உள்ளதால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் ஹாட்ஸ்டாரில் இந்த படத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை குவிந்து வருகிறது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ’மண்டேலா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சஷிகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து உடனடியாக கொரோனா வைரஸ் சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.