ஷங்கர் மகள் நடிக்க வருவதற்கு இவர்தான் காரணமாம்: நன்றி கூறிய 2டி நிறுவனம்!

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சினிமாவில் நடிக்க வருவதாகவும் சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும் ‘விருமன்’ என்ற படத்தின் நாயகி அவர்தான் என்றும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஷங்கர் மகள் நடிக்க வருவது குறித்த தகவல் திரையுலகில் உள்ள யாருக்கும் தெரியாமல் ஆச்சரியமான அறிவிப்பு வெளிவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஷங்கர் மகள் நடிக்க வந்ததற்கு காரணம் மேனேஜர் தங்கதுரை என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இவர் சூர்யா, ஜோதிகா உள்பட பல பிரபலங்களுக்கு மேனேஜராக இருந்துவரும் நிலையில் சமீபத்தில் இவர் இயக்குனர் ஷங்கருக்கும் மேனேஜர் ஆகியுள்ளார். இதனை அடுத்து ஷங்கர் மற்றும் சூர்யா இடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தான் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘விருமன்’ படத்தில் அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகமாகி இருப்பதாகவும் இதற்கு முழு காரணம் தங்கதுரை தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்வது போல் 2டி நிறுவனத்தின் ராஜசேகர பாண்டியன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மேனேஜர் தங்கதுரை அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேனேஜர் தங்கதுரை சூர்யா, ஜோதிகா, ஷங்கர் மட்டுமின்றி தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான தமன்னா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா லட்சுமி, பிரியங்கா, விஷ்ணு விஷால் உள்ளிட்டவரகளுக்கும் இவர்தான் மேனேஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இது என் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: விஜய் டிவி ஜாக்குலின் பதிவு செய்த புகைப்படம்!

விஜய் டிவி பிரபலமான ஜாக்குலின் புத்தம் புதிய கார் வாங்கியதை அடுத்து இது என்னுடைய இரண்டாவது வீடு என்றும் இது என் குடும்பத்தின் புதிய உறுப்பினர் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை: தமிழ் நடிகை விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பது தவறானது என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்றும் பிரபல நடிகை மற்றும் இயக்குனர்

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவியது எப்படி?

கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

UPயில் மர்மக்காய்ச்சல்… உயிரிழப்பு 50ஐ தாண்டிய அவலம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மர்மக்காய்ச்சல் பரவி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பிரியங்கா? 

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்