மணிரத்னம் பட நாயகியாகும் பிரபல நடிகரின் வாரிசு

  • IndiaGlitz, [Tuesday,August 15 2017]

'காற்று வெளியிடை' படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்வுப்பணி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்கவுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியும் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகை கரீனா கபூரின் கணவரும் பாலிவுட்டின் பிரபல நடிகருமான சயீப் அலிகான் அவர்களின் மகள் சாரா அலிகான் இந்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். சயீப் அலிகானின் முதல் மனைவிக்கு பிறந்த இவர் மணிரத்னம் படத்தில் அறிமுகம் ஆவதன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்ரார்.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும், படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பும் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'கரகாட்டக்காரன்' புகழ் சண்முகசுந்தரம் காலமானார்

பழம்பெரும் குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார்...

விவசாயிகளை காப்பாற்றுங்கள்: ஜி.வி.பிரகாஷின் சுதந்திரதின செய்தி

இந்தியாவின் 71வது சுதந்திர தினம் இன்று நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றியுள்ளனர்...

சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறியது ஏன்? சிம்பு விளக்கம்

நடிகர் சிம்பு அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளியேறுவதாக நேற்று அறிவித்துள்ளார்...

ஓவியா ஆர்மியினர்களிடம் வசமாக சிக்கிய காயத்ரி

ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை வேறு யாரும் இந்த ரியாலிட்டி ஷோவில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டதால் அவரை திட்டம் போட்டு கார்னர் செய்து வெளியேற்றினர்...

'மெர்சல்' ஆடியோ விழா நேரடி ஒளிபரப்பு: விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தளபதி விஜய் நடிக்கும் படத்தின் ஆடியோ விழா என்றாலே அன்றைய தினம் அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றதுதான். இருப்பினும் நேரம், இடம் கருதி ஆடியோ விழா நடைபெறும் இடத்தில் ஒருசில குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்...