close
Choose your channels

மணிரத்னம் அடுத்த படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்

Monday, July 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இந்த படத்தில் ராம்சரண் மற்றும் அரவிந்தசாமி நடிப்பதாக கூறப்பட்டாலும் இந்த தகவல் இன்னும் படக்குழுவினர்களால் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கி வெளிவந்த 'தளபதி', 'ரோஜா', 'இருவர்', 'உயிரே' மற்றும் 'ராவணன்' ஆகிய படங்களுக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'இருவர்', 'உயிரே' படங்கள் உள்பட ஐந்து முறை சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்ற சந்தோஷ் சிவன் இந்த படத்திற்காகவும் விருது பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மணிரத்னம் இயக்கவுள்ள இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் 'காற்று வெளியிடை' நாயகி அதிதிராவ் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்கம்போல் இந்த படத்திற்கும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.