மணிப்பூர்: 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக சேவகிக்கு வெறும் 85 ஓட்டுக்கள்

  • IndiaGlitz, [Saturday,March 11 2017]

சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இந்த மாநிலத்தில் ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா என்ற சமூக சேவகி 16 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த மணிப்பூர் சட்டமன்ற தேர்தலுக்காக புதிய கட்சி ஆரம்பித்து மாநிலம் முழுவதும் தேர்தலை சந்தித்தார் ஷர்மிளா.

மணிப்பூர் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங்கை எதிர்த்து தொபல் தொகுதியில் அவரே போட்டியிட்டார். ஆனால் 16 ஆண்டுகள் பொது பிரச்சனை ஒன்றுக்காக உண்ணாவிரதம் இருந்த ஷர்மிளா டெபாசிட் இழந்ததோடு அவருக்கு கிடைத்த ஓட்டுக்கள் வெறும் 90 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்மிளா மட்டுமின்றி அவரது கட்சி வேட்பாளர்கள் அனைவருமே குறைந்த வாக்குகளே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் முதல்வர் ஓக்ரம் இபோபி 18,649 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மணிப்பூரில் மொத்தமுள்ள 63 தொகுதிகளில் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் பாஜக 12 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உ.பியின் அடுத்த முதல்வர் யார்? ஆட்சிமன்ற கூட்டத்தில் மோடி-அமித்ஷா ஆலோசனை

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உத்தரபிரதேச மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன

தனுஷூக்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு, அனிருத்

நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர், என பல்வேறு அவதாரங்களில் கோலிவுட்டில் வலம் வரும் தனுஷ் இயக்கிய முதல் படம் 'பவர்பாண்டி. இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது...

தன்ஷிகா படத்தில் இணைந்த மணிரத்னம் நாயகன்

'கபாலி' புகழ் தன்ஷிகா தற்போது இயக்குனர் ரமணா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

ரஜினிகாந்த் வீட்டில் 'குற்றம் 23' படக்குழு

அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'குற்றம் 23' 'என்னை அறிந்தால் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று உற்சாகமாக இருந்த அருண்விஜய்க்கு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்...

சுசித்ரா, மடோனாவை தொடர்ந்து ஸ்ரீதேவிக்கும் வந்த சோதனை

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் பல கோலிவுட் நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் கசிந்ததால் கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் இருந்தது.