மணிரத்னம்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து இயக்கும் படம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Saturday,December 07 2019]

லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் அவர்களுக்கு சமீபத்தில் மலேசிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் ஒன்றை வழங்கியது. இதனை அடுத்து அவரை கௌரவிக்கும் வகையில் சென்னையில் நேற்று விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்டார் 

இந்த விழாவில் மணிரத்னம் பேசும்போது ’சுபாஷ்கரன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நான் கேள்விப்பட்ட போது மிகவும் ஆச்சரியமடைந்தேன். எதிர்காலத்தில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் ஐடியா எனக்கு உள்ளது. ஒரு காலத்தில் நிச்சயம் இது நடக்கும். அந்த அளவுக்கு அவருடைய வாழ்க்கையில் மிகவும் சுவாரசியமான சம்பவங்கள் உள்ளது

பிரிட்டனில் ஒரு தமிழர் வெற்றிகரமாக தொழில் அதிபராக ஆகி உள்ளார் என்றால் அதற்கு பின்னால் இருக்கும் சம்பவங்கள் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு உள்ளன என்று அவர் கூறியுள்ளார் 

ஏற்கனவே சுபாஸ்கரன் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க தான் விரும்புவதாக ஏஆர் முருகதாஸ் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ’மணிரத்னம் அவர்கள் சுபாஷ்கரன் வாழ்க்கை வரலாற்றை முதல் பாகமாக எடுத்தால் நான் இரண்டாம் பாகமாக எடுபேன். அவருடைய வாழ்க்கையில் இரண்டு பாதங்கள் எடுக்கும் அளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார் 

எனவே சுபாஸ்கரன் வாழ்க்கை வரலாற்றை மணிரத்தினம் முதல் பாகமாகவும் ஏஆர் முருகதாஸ் இரண்டாம் பாகமாகவும் உருவாகும் நாள் எப்போது வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்