close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்தின் முக்கிய பணி முடிந்தது: ரிலீஸ் எப்போது?

Thursday, January 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தொழில்நுட்ப பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்கும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் அவர்கள் ’ பொன்னியின் செல்வன்’ படத்தின் பாடல்கள் ரெக்கார்டிங் பணியை முழு அளவில் முடித்துவிட்டு அதனை இயக்குனர் மணிரத்னத்திடம் ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகிவரும். இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஏஆர் ரகுமான் அவர்கள் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முக்கிய பணியை முடித்துவிட்டதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக துபாய் அல்லது லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு குறைந்த பிறகு இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.