close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' இறுதிக்கட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

Thursday, September 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது என்பதும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் கசிந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை திரும்பிய ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றுள்ளதாகவும் அங்கு சில முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை ஊட்டியில் எந்த திரைப்பட குழுவினரும் செல்லாத பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், எனவே திரையில் இந்த பகுதியை பார்க்கும்போது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஊட்டி படபடப்புடன் ’பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் பாகம்-2 ஆகியவற்றின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைவதாகவும் அதன் பின்னர் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.