close
Choose your channels

த்ரிஷா வெளியேறியதற்கு மணிரத்னம் தான் காரணம்: சிரஞ்சீவி

Thursday, April 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சார்யா’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்தார் என்றும் அதன் பின்னர் அவர் திடீரென அந்த படத்தில் விலகிவிட்டார் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சிரஞ்சீவி படத்திலிருந்து வெளியானதற்கு காரணம் கூறிய நடிகை த்ரிஷா இந்த படத்தில் தான் ஒப்பந்தம் ஆகும் போது கூறப்பட்ட கதை வேறு என்றும், தற்போது வேறாகவும் இருப்பதால் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறியிருந்தார். த்ரிஷாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் சிரஞ்சீவி இது குறித்து கூறிய போது ’த்ரிஷா இந்த படத்தில் இருந்து வெளியேறியதை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் இருப்பினும் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் மற்றும் காட்சிகள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும் கூறினார்

மேலும் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக த்ரிஷா மொத்தமாக கால்ஷீட் கொடுத்து விட்டதால் தான் ’ஆச்சாரியா’ படத்தில் இருந்து அவர் விலகியதாகவும் மற்றபடி படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த விதமான தவறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சிரஞ்சீவியின் இந்த பதிலுக்கு த்ரிஷா என்ன விளக்கம் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.