close
Choose your channels

'பொன்னியின் செல்வன் 2' படத்தை தமிழகத்தில் வெளியிடும் நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Monday, March 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்ததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகசுள்ளது. மேலும் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது என்பதும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழகத்தில் ’பொன்னின் செல்வன்’ திரைப்படத்தையும் ரிலீஸ் செய்கிறது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு தேவையான திரையரங்குகள் கிடைக்கும் என்றும் முதல் பாகத்தை விட அதிக வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.