மணிரத்னத்தின் 3 மாத திட்டம்

  • IndiaGlitz, [Saturday,August 15 2015]

சமீபத்தில் சூப்பர் ஹிட்டான 'ஓகே கண்மணி'யை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்தபடத்தின் திரைக்கதை தயாராகிவிட்டது என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் கார்த்தி, துல்கார் சல்மான், ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விரைவில் ஆரம்பமாக இந்த படத்தின் படப்பிடிப்பை மூன்றே மாதங்களில் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மணிரத்னம் அவர்களுடன் முதன்முதலாக கைகோர்க்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். இவர் ஏற்கனவே தமிழில் ஆட்டோகிராப், அந்நியன், தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, வில்லு போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ''ஓகே கண்மணி' படத்தை போலவே இந்த படமும் ஒரு வித்தியாசமான ரொமாண்டிக் படம் என்று கூறப்படுகிறது.

More News

பாகுபலி வழியில் 'ருத்ரம்மாதேவி'

இந்திய திரையுலகில் பல சாதனைகள் படைத்த 'பாகுபலி' திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வெற்றி நடை போட்டு வசூலை..

'புலி' டிரைலரின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிந்தது.

இளையதளபதி விஜய் நடித்துள்ள புலி' படத்தின் டிரைலர் வரும் 20ஆம் தேதி வெளிவரும் என விஜய்யே தனது சமூக வலைத்தளத்தில் ..

விக்ரம் வெளியிட்ட இரட்டை வேட ரகசியம்

விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தின் டீஸர் நேற்று இரவு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் விக்ரம்...

ஸ்ரீமந்துடு திரைப்படத்தை அப்பாவுடன் இணைந்து பார்த்த ஸ்ருதி

மகேஷ்பாபுவுடன் ஸ்ருதிஹாசன் நடித்த ஸ்ரீமந்துடு மற்றும் செல்வந்தன் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்...

படப்பிடிப்பில் காயமடைந்த ஸ்ருதிஹாசன் நாயகன்

பாலிவுட் திரையுலக கலைஞர்களுக்கு இது ஒரு இக்கட்டான காலம் போல தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 'பிகே'...