close
Choose your channels

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்.. ரொமான்ஸ் கதையா?

Sunday, May 18, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மணிரத்தினம் எப்போதும் ஒரே ஜானர்களில் பட்ம் செய்யாமல், வித்தியாசமாக படங்களை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

சரித்திரக் கதை அமைப்பை கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களையும் இயக்கிய மணிரத்னம், அதன்பின் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்த அதிரடி ஆக்ஷன் படமான ‘தக்லைஃப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதையை அடிப்படையாக கொண்டதாகவும், கிட்டத்தட்ட 'ஓகே கண்மணி' போன்ற கதை அம்சம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும், பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி நாயகனாக இதில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘தக்லைஃப் படம் வெளியாகியவுடன், இந்த புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் நாயகியாக நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், "நான் சாய் பல்லவி ரசிகன்" என்று மணிரத்னம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment