மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ-டைட்டில் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,May 22 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் மணிரத்னம் அடுத்த படவேலைகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்தார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் நாயகனாக ராம்சரண்தேஜா நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு 'யோதா' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் மணிரத்னம் அவர்களால் அறிமுகமான பிரபல நடிகர் அரவிந்தசாமி இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறாது. மேலும் மணிரத்னம் படத்தின் அடுத்த படம் நாயகி அதிதிராவ் ஹைதி என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது,.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்படும், என்றும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த படம் ராம்சரண் தேஜாவின் முதல் நேரடி தமிழ்ப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

More News

'விஐபி 2' படத்திற்காக தனுஷ்-கஜோலின் புதிய முயற்சி

தனுஷ், அமலாபால், கஜோல் உள்பட பலர் நடிப்பில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

சென்னை பாக்ஸ் ஆபீஸில் அசைக்க முடியாத இடத்தில் 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் நான்காவது வாரமாக வசூலை குவித்து வருகிறது...

அட்லியின் முதல் படத்திற்கு சென்னை பாக்ஸ் ஆபீஸின் நிலை என்ன?

'ராஜா ராணி', 'தெறி' என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, முதன்முதலாக தயாரித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

சாட்டிலைட் டிவியை அடுத்து விஷாலின் அடுத்த அதிரடி திட்டம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக விஷால் தலையிலான இளைஞர் படை பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி திருப்பங்கள், அறிவிப்புகள் வெளிவந்து தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்...

ராதாமோகன்-அருள்நிதியின் 'பிருந்தாவனம்': திரை முன்னோட்டம்

'மொழி', 'அபியும் நானும்', 'கெளரவம்', 'உப்புக்கருவாடு' போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகனின் அடுத்த படைப்பு 'பிருந்தாவனம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் வெள்ளி அன்று வெள்ளித்திரைக்கு வருகிறது...