இன்னிக்கி இல்லைன்னா நாளைக்கு கண்டிப்பா வரும்: அடுத்த படம் குறித்து மணிரத்னம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


மணிரத்னம் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ’தக்லைஃப்’ திரைப்படம் மே 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதும், நேற்று கூட படக்குழுவினர் மும்பை சென்று புரமோஷன் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று மாலை, இந்த படத்தின் சுகர் பேபி என்ற பாடல் வெளியாகியுள்ள நிலையில், முழு வேகத்தில் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மணிரத்னம் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க இருப்பதாகவும், ’ஓகே கண்மணி’ போன்ற ஒரு முழுக்க முழுக்க காதல் கதை அம்சம் கொண்ட படத்தை இயக்க போவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த மணிரத்னம், இதுகுறித்து கூறிய போது,
"இப்போதைக்கு அது என் மனதில் ஐடியாவாக மட்டும் தான் உள்ளது. அது எல்லாம் ஒருங்கிணைந்து வர வேண்டும். அப்படி ஒரு படம் பண்ண வேண்டும் எனக்கு ரொம்ப ஆசை தான். ஆனா ஸ்கிரிப்ட் முழுமையாக முடிவடைய வேண்டும். அதன் பின் அதற்கேற்ற மாதிரி நட்சத்திரங்கள் கிடைக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து கிடைத்தால், கண்டிப்பாக பண்ணுவேன். ஆனால் இன்றைக்கு இல்லாட்டி நாளைக்கு அந்த படத்தை பண்ணுவேன்," என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து, நிச்சயமாக மணிரத்னம் இயக்கத்தில், முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படம் வெளியாகும் என்பது உறுதி ஆகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com